Sunday, June 2, 2013

வீரகேரளம்புதூரில் பைக் திருடிய2 பேர் கைது

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் பைக் திருடிய திருடர்களை போலீசார் கைது செய்தனர்.வீரகேரளம்புதூர் கோட்டை அண்ணா நகர் அருகில் சுரண்டை இன்ஸ்பெக்டர் ஜமால், எஸ்.ஐ., சுந்தர் மூர்த்தி, போலீசார் சசிகுமார் மற்றும் அந்தோணி பாஸ்கர் வாகன பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே நம்பர் பிளேட் இல்லாத வண்டியை ஓட்டிவந்த வடகரையைச் சேர்ந்த மனோகரன் (எ) முகம்மது ரியாஸ்தீன் (38), சங்கரன்கோவிலை அடுத்த பெருங்கோட்டூரைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் வேலுச்சாமி (49) ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் ராஜபாண்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது எக்ஸெல் வண்டியைத் திருடி, நம்பர் பிளேட்டைக் கழட்டி ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து ஹோண்டா சைன் பைக்கும் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

நன்றி : தினமலர் 

வீரகேரளம்புதூர் புனித அந்தோணியார்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.இப்பள்ளியில் 151 மாணவிகள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி சீதாலெட்சுமி தமிழ் 97, ஆங்கிலம் - 84, கணிதம் - 100, அறிவியல் - 99, சமூக அறிவியல் - 98 மதிப்பெண்களுடன் மொத்தம் 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவி ஆபிதா தமிழ் 91, ஆங்கிலம் - 85, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 100 மொத்தம் 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளார்.மாணவி மணிமேகலை தமிழ் - 94, ஆங்கிலம் - 87, கணிதம் - 96, அறிவியல் - 98, சமூக அறிவியல் - 98 மொத்தம் 473 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார். மாணவி ஆனந்தி கணிதம் அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் நூறு சதவிகித மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவிகளை தாளாளர் மேரிடெய்சி ராஜம்மாள், தலைமை ஆசிரியை காளியம்மாள் மற்றம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

நன்றி : தினமலர்