Friday, July 5, 2013

வீரகேரளம்புதூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூரில் தமிழ்நாடு வி.ஏ.ஓ.,க்கள் சங்கம் மற்றும் கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக முதல்வரின் கவனத்திற்கு தங்கள் கோரிக்கைகளைக் கொண்டு செல்லும் விதமாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வி.ஏ.ஓ., சங்க தாலுகா தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். சங்கத்தலைவர் வேல்ச்சாமி முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். வங்கிகள் மூலம் சம்பளம் வழங்கும் முறையால் காலதாமதம் ஏற்படுவதால் அம்முறையை ரத்துசெய்யவேண்டும். வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர்களுக்கு நியாயமான பணி உயர்வு வழங்கிட வேண்டும். அங்கீகாரம் பெற்ற சங்கங்களுக்கு கூட்டுக்கலந்தாய்வுக்கு நாள் ஒதுக்க வேண்டும். உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து அலுவலர்களும், உதவியாளர்களும் கலந்து கொண்டனர். கிராம உதவியாளர் பரமசிவன் நன்றி கூறினார்.
நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment