Friday, December 16, 2011

குழாய் வீடு!

குழாய் வீடு!: மாவட்டதிற்கு ஒரு வீடு,மாநிலத்திற்கோர் வீடு,தலைநகரில் ஒரு வீடு,குளிர்நகரிலே ஒரு வீடு என்று வீடுகளுக்கு மேல் வீடுகளாககட்டி வாழும் நம் இந்திய தாய் திருநாட்டில்தான் இப்படி குடியிருக்க ஒரு குடிசைகூட இல்லாதவர்களும் நிறைய பேர் உள்ளனர்.இந்த குடும்பத்திற்கு பெட்ரூம் ஒருகுழாய் என்றால் ஸ்டடி ரூம் ஒரு குழாய்,டைனிங் ரூம் மட்டும் பொதுவாம்.


ஏன் இந்த அவலம்????


நன்றி: தினமலர் 

Friday, November 25, 2011

வீ.கே.புதூரில் கலெக்டர் ஆய்வு


வீரகேரளம்புதூர்:வீ.கே.புதூர் தாலுகாவில் தென்காசி எம்.எல்.ஏ.,மூலம் வழங்கவிருக்கும் இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.வீ.கே.புதூர் தாலுகாவில் உள்ள முத்தம்மாள்புரம், நவநீதகிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களில் இம்மாதம் 30ம் தேதி தென்காசி எம்.எல்.ஏ., சரத்குமார் இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி ஆகியவற்றை வழங்குகிறார். வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் மேலோட்ட ஆய்வினை மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் செல்வராஜ், இலவச பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவற்றின் தரத்தை சோதிக்கவும், பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய விதம் குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 20 பேருக்கு முதியோர் பென்சன் பெறுவதற்கான உத்தரவை அவர் வழங்கினார்.ஆய்வின் போது தாசில்தார் சுமங்கலி, துணை தாசில்தார்கள் சிவசுப்பிரமணியன், சுதந்திரம், தாமோதரன், ஹென்றி பீட்டர், வட்ட வழங்கல் அலுவலர் சேதுராமலிங்கம், தாலுகா தலைமை அளவர் அப்துல் ஜப்பார், கலெக்டர் அலுவலக "பி' பிரிவு தலைமை அலுவலர் சுகுமார் மற்றும் அலுவலக ஊழியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

நன்றி:தினமலர் 

Friday, November 18, 2011

வீராணம் பெரியகுளக்கரை சேதம் சீரமைக்க பஞ்.,தலைவர்கள் கோரிக்கை


வீரகேரளம்புதூர் : கற்கள் சரிந்து சேதமாகிக் கிடக்கும் வீராணம் பெரியகுளக்கரையை உடனடியாக செப்பனிட விவசாயிகள் சார்பில் ராஜகோபாலப்பேரி, வீராணம் பஞ்., தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வீராணம், அதிசயபுரம், ராஜகோபாலப்பேரி, நெட்டூர், நாச்சியார்புரம், அகரம், காவலாக்குறிச்சி, கடங்கனேரி கிராம பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும், நீராதாரமாகவும் விளங்குவது வீராணம் பெரியகுளம். ராஜகோபாலப்பேரியில் துவங்கி அதிசயபுரம், வீராணம் வரையிலும் சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள நீண்டு, விரிந்த இக்குளத்தின் கரை நெடுகிலும் 7 மடைகள் உள்ளன. இவற்றின் மூலமும், இங்கிருந்து உபரிநீர் சென்று நிறையும் கிடாரக்குளம், காசிக்கு வாய்த்தான்குளம், நானூற்று வென்றான் குளம் ஆகிய குளங்களின் மூலமும் சுமார் 2,500 ஏக்கர் பரப்பிலுள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் தற்போது 10 அடி உயரத்திற்கு 104 மில்லியன் கனஅடி நீர் நிறைந்து குட்டி கடல்போல் காட்சி அளிக்கும் இக்குளத்தின் கரை பல இடங்களில் மண் அரிப்பு ஏற்படாமலிருக்க அடுக்கி வைத்த சதுரக்கற்கள் சரிந்து, மண் கரைந்து, சேதமடைந்து, பலமிழந்து காணப்படுகிறது. இவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ஆலங்குளம் எம்.எல்.ஏ., பி.ஜி.ராஜேந்திரன் வீராணத்தில் நடந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் மேடையிலேயே நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜிடம் கோரிக்கை வைத்தார். அவரும் விரைவாக செய்து தருவதாக உறுதியளித்தார். தற்போது பெய்த தொடர் மழையால் இக்குளம் முக்கால் மடங்குக்கு மேல் நிறைந்துவிட்டது. மேலும் இரண்டடி தண்ணீர் தேக்கினால் கரை மேலும் பலமிழக்கும் அபாயமும், ராஜகோபாலப்பேரி கிராமத்திற்குள் நீர்புகும் நிலையும் உள்ளது. எனவே இக்குளக்கரையை உடனடியாக சீர்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வீராணம் பஞ்., தலைவர் பொன்னுத்துரைபாண்டியன், ராஜகோபாலப்பேரி பஞ்., தலைவர் ஜான் ஆகியோர் அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர். தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமாரிடமும் இருவரும் மனுக்களை அளித்தனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பொற்செழியன் கூறும்போது:- ""வீராணம் கால்வாய், நெட்டூர் கால்வாய் மற்றும் குளங்களை சீரமைத்து புனரமைப்பதற்காக நபார்டு வங்கியிலிருந்து உதவிபெற 3.20 கோடி ரூபாய்க்கு கருத்துரு தயாரித்து ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவி கிடைத்ததும் வரும் மார்ச் மாதத்திற்குள் இப்பணி மேற்கொள்ளப்பட்டு குளங்கள் சீரமைக்கப்படும்'' என்றார்.

நன்றி: தினமலர் 

Wednesday, November 2, 2011

வீரகேரளம்புதூர் தாலுகாவில் 78 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

®WÚLW[•“ŠŸ RÖ¨LÖ«¥ 78 ÚT£eh CXYN ®y|UÛ] TyPÖÛY ÙRÁLÖp ER« LÙXePŸ LÖjÚLVÁ ÙLÁ]z YZjf]ÖŸ.

CXYN ®y|UÛ] TyPÖ

ÙS¥ÛX UÖYyP• ®WÚLW[•“ŠŸ RÖ¨LÖ A¨YXL†‡¥ CXYN ®y|UÛ] TyPÖ YZjh• ŒL²op SP‹R‰. ÙRÁLÖp ER« LÙXePŸ LÖjÚLVÁ ÙLÁ]z RÛXÛU RÖjf]ÖŸ. ®WÚLW[•“ŠŸ RÖp¥RÖŸ rUjL¦, RÛXÛU›P†‰ ‰ÛQ RÖp¥RÖŸ pYr‘WU‚VÁ, RÖp¥RÖŸ rR‹‡W• BfÚVÖŸ ˜ÁÂÛX Yf†R]Ÿ. YÖzïŸ Y£YÖš BšYÖ[Ÿ UÖ¡VTÁ YWÚY¼¿ ÚTp]ÖŸ.

R–ZL AWpÁ HÛZ G¸ÚVÖŸLºeh CXYN ®y|UÛ] YZjh• ‡yP†‡Á g² YÖzïŸ fWÖU TtNÖV†‰eh EyTyP 50 ÚT£eh•, F†‰UÛX fWÖU TtNÖV†‰eh EyTyP 28 ÚT£eh• CXYN ®y|UÛ] TyPÖeLÛ[ ER« LÙXePŸ LÖjÚLVÁ ÙLÁ]z YZjf]ÖŸ.

ŒL²op›¥, F†‰UÛX Y£YÖš BšYÖ[Ÿ NÖ•TY ™Ÿ†‡, rWÛP Y£YÖš BšYÖ[Ÿ AW«‹†, ®WÚLW[•“‰ÖŸ Y£YÖš BšYÖ[Ÿ GÁ.GÍ.r‘WU‚VÁ fWÖU ŒŸYÖL A¨YXŸ pR•TW• U¼¿• TXŸ LX‹‰ ÙLցP]Ÿ.



நன்றி : தினத்தந்தி 

Saturday, October 22, 2011

பார்வையற்றோர்க்கு தன்னம்பிக்கை தரும் செயற்கை கண்கள்

பார்வையற்றவர்கள் மற்றும் விபத்தினால் கண் இழந்தவர்களின் முகத்தோற்றத்தை அழகாக மாற்றவும், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் தொண்டு நிறுவனம் சார்பில், சலுகை விலையில் செயற்கை கண்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பிறவியிலேயே பார்வை திறன் இல்லாதவர்கள், விபத்தில் கண் பார்வை இழந்தவர்கள், கண் சுருக்கம் மற்றும் கண்புரை உள்ளிட்ட குறைபாடுகள் உடையவர்களின் முகத்தோற்றம் பார்பதற்கு சற்று பொலிவற்று காணப்படும். இதனால், இக்குறைபாடுகளை உடையோர், தாழ்வு மனப்பான்மை காரணமாக தங்களை சமூகத்தில் இருந்து தனிமைபடுத்திக் கொண்டு வாழ்கின்றனர்.இதனால், பார்வையற்றவர்களில் திறமை மிக்க பல சாதனையாளர்களும், சத்தம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றனர். பார்வையற்றோரின் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கிலும் செயற்கை கண்கள் வடிவமைத்து, அவற்றை பொருத்தும் பணியில், திருவான்மியூர்,
"பிரீடம் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மருத்துவம் மற்றும் சிறப்பு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வரும், இந்த அறக்கட்டளை சார்பில் தற்போது, செயற்கை கண் நிபுணர்களைக் கொண்டு கண் பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண் பொருத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செயற்கை கண் நிபுணர் திவாகர் கூறியதாவது:கண் பார்வையற்றவர்கள் மற்றும் கண் இல்லாதவர்களுக்கு செயற்கை கண் பொருத்துவதன் மூலம் பார்வை திரும்ப பெறமுடியாது. ஆனால், இழந்த அவர்களது கண் இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். இதனால், பார்வையற்றவர்களுக்கு தங்களுக்கு கண் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை நீங்கி, தன்னம்பிக்கை கிடைக்கிறது.மாற்றுத் திறனாளிகளின் கண் மற்றும் மருத்துவச் சான்றுகளை தீவிரமாக ஆய்வு செய்த பின்னர், மாதிரி அளவெடுத்து செயற்கை கண் வடிவமைக்கப்படுகிறது. "பாலி மீத்தைல் மெத்தாக்கிரை லேட்' என்ற மருத்துவ வகை, பிளாஸ்டிக்கைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த செயற்கை கண்கள் முற்றிலும் பாதுகாப்பானது. இதை,பொருத்திக்கொள்ள வயது வரம்பு கிடையாது.இந்திய அளவில், செயற்கை கண் வடிவமைப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும். தமிழகத்தில் தற்போது, இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செயற்கை கண் வடிவமைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனைகளில் செயற்கை கண் பொருத்துவதற்கு, நான்கு முதல் ஐந்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டி யுள்ளதால், அடித்தட்டு மக்கள் இதை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.எனவே, ஏழை எளிய மக்களும் பயனடையும் வகையில், எங்களின் அறக்கட்டளையின் சார்பில் தற்போது, குறைந்த விலைக்கு செயற்கை கண் பொருத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்பதே
எங்களது நோக்கம்.ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பார்வையற்றவர்களுக்கு இலவசமாக செயற்கை கண் பொருத்த அரசு முன்வந்தால், அவர்களின் தன்னம்பிக்கை மேம்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். 

நன்றி : தினமலர் 

Sunday, October 16, 2011

வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்


அதிக சம்பளம், இலவச தங்குமிடம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் என்பன போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெரும்பாலான இளைஞர்கள் மோசம் போய், அந்தந்த நாடுகளின் சிறைகளில் அவதிப்பட்டு திரும்புகின்றனர். முறையான ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாடு சென்றால், கை நிறைய சம்பளத்துடன் பாதுகாப்பும் கிடைக்கும்.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. விவசாயம் இல்லாததால், பலர் நகரங்களை நோக்கி வேலை தேடி படையெடுக்கின்றனர். சிலர், "வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இவர்களை போன்றோர்களை தேடிக் கொண்டிருக்கும் மோசடி ஏஜன்டுகள், உள்ளூர் பிரமுகர்கள், வெளிநாட்டில் வேலை தயாராக உள்ளது. சம்பளம் பல ஆயிரம்; தங்குமிடம் இலவசம். ராஜ வாழ்க்கை வாழலாம்' என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். இதில் மயங்குவோரிடம், சில லட்சங்களை பெற்றுக் கொண்டு, பாஸ்போர்ட், விசா, விமான டிக்கெட் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர்.பெரும்பாலும் வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கு, "டூரிஸ்ட் விசா' எடுக்கப்படுகிறது. இது, அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லும். பின், நாடு திரும்பி விட வேண்டும். இந்நிலையில், "டூரிஸ்ட் விசா' மூலம் வெளிநாட்டிற்குச் செல்லும் அப்பாவிகள், ஆறு மாதம் முடிந்தவுடன் "ஓவர் ஸ்டே' என்ற வகையில் அந்நாட்டு போலீசாரிடம் சிக்கிக் கொள்கின்றனர்.பலரின் பாஸ்போர்ட்டுகளை வேலை கொடுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பிடுங்கி வைத்துக் கொள்வதால், நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். சொன்னபடி சம்பளமும் கிடைக்காமல், நாடு திரும்பவும் முடியாமல், சிறையில் அடைபட்டு சித்திரவதைக்கு உள்ளாகும் இளைஞர்கள், பின், இந்திய அரசின் முயற்சியின் பேரில் நாடு திரும்பும் அவலமான சூழ்நிலை நிலவுகிறது.வெளிநாடுகளில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. ஐ.டி., இன்ஜினியர்கள் ஆனாலும் சரி, கட்டட வேலைக்கு செல்பவர்களானாலும் சரி, இந்த விதிமுறைகளை கடைபிடித்தால் அவர்களுக்கு வேலை, சம்பளம், மருத்துவக் கவனிப்பு, பாதுகாப்பு ஆகியவை உத்தரவாதமாக இருக்கும்.

வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து குடியுரிமை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "முதலில் எம்ப்ளாய்மென்ட் விசா மூலம் மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் சுற்றுலா விசா (டூரிஸ்ட் விசா) மூலம் வேலைக்கு செல்லக்கூடாது. 10ம் வகுப்பிற்கு கீழே படித்தவர்கள் இ.சி.ஆர்., (இமிகிரேசன் கிளியரன்ஸ் ரிக்கொயர்டு) சான்றிதழ் பெற வேண்டும். இதை, புரெக்டக்டர் ஆப் இமிகிரன்ட் என்ற அதிகாரியிடம் பெறலாம்.அடுத்ததாக, வேலை வாய்ப்பு தரும் நிறுவனம் தனக்கு எத்தனை ஆட்கள் தேவைப்படுகின்றனர்; அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு; சலுகைகள் என்னென்ன ஆகியவை குறித்த தகவல்களை அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரத்திற்கு கொடுத்து, அங்கு அட்டஸ்டட் பெற வேண்டும். அதோடு. தங்கள் சார்பாக எந்த நிறுவனம் இந்தியாவில் ஆட்களை தேர்வு செய்து அனுப்பப்போகிறது என்ற தகவலும் கொடுக்கப்பட வேண்டும். (இந்தியாவில் ஆட்களை எடுக்கும் நிறுவனம், மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறையிடம் முறையான உரிமம் பெற்றுள்ளதாக இருக்க வேண்டும்)மூன்றாவதாக, குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனமும், வேலைக்குச் செல்லும் தொழிலாளியும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை (அக்ரிமென்ட்) செய்து கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்த நகல், இந்திய தூதரகத்தில் அட்டஸ்டட் செய்யப்பட வேண்டும். குறைந்தது, இந்த மூன்று விதிமுறைகளை கடைபிடித்தால் கூட போதும். வெளிநாட்டு வேலைக்கு செல்வோர், வேலைக்கு சேர்ந்த பின் அவதிப்பட வேண்டியதிருக்காது' என்றார்.

வெளிநாட்டு வேலைக்கு போக விரும்பும் இளைஞர்களுக்கு உதவுவதற்கு, சென்னையில் தமிழக அரசின் சார்பில், "ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட்' என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இதுவரை பல ஆயிரக்கணக்கானவர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், கனடா, அயர்லாந்து, சவுதி அரேபியா, குவைத், சூடான், வங்கதேசம், பிரான்ஸ், ஓமன், பக்ரைன், லிபியா, மாலத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், இந்நிறுவனத்தை நேரடியாக அணுகி, தங்களுக்கு தேவையான ஆட்கள் குறித்து தகவல்களைத் தருகின்றன.ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் செல்வோருக்கு 100 சதவீதம் பாதுகாப்பு உண்டு.

இது குறித்து இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் முறைப்படி ஆட்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகிறோம். வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புவோர், முதலில் எங்கள் நிறுவனத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்கள் ஆட்கள் தேவை என்று எங்களிடம் கேட்கும். அப்போது, அதற்கு தகுதியுடையவர்களை அங்கு அனுப்பி வைக்கிறோம். மேலும், வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்து, அதன் மூலமும் ஆட்களை எடுத்தும் அனுப்புகிறோம். எங்கள் நிறுவனத்தின் மூலம் செல்வோர், "எம்ப்ளாய்மென்ட் விசா' உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பெற உதவுகிறோம். தனியார் நிறுவனங்கள் இந்த சேவைக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கட்டணமாக பெறுகின்றன. நாங்கள், 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூல் செய்கிறோம். எங்கள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்வோர்க்கு பாதுகாப்பு 100 சதவீதம் உத்தரவாதம்' என்றார்.

தொடர்பு கொள்ளலாமே!
சம்பளம், பாதுகாப்பு உத்தரவாதத்துடன் வெளிநாடு செல்ல விரும்புவோர், தமிழக அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தை அணுகலாம். அனைத்து பணிகளுக்கும் இந்நிறுவனம் ஆட்களை அனுப்புகிறது.இந்நிறுவனம் தற்போது சென்னை, அடையார், 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, வீட்டு வசதி வாரிய வளாக முதல் தளத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தை 044 24464268, 24464269 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி : தினமலர் 

Friday, October 14, 2011

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்


பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி,

* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.

* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.

* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.

* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.

* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.

இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.


தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.

மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.
நன்றி : தினமலர் 

Wednesday, September 28, 2011

வீ.கே.புதூர் அருகே பெண்ணின் எலும்புக்கூடு

வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் அருகில் மலைப்பகுதியில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வீ.கே.புதூர் - ஆலங்குளம் வழியில் உள்ள இடைச்சி மலையின் வடக்கு பகுதியில் முட்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் ஒரு எலும்புக்கூடு கிடப்பதை கண்ட வனக்காவலர் காசி கழுநீர்குளம் கிராம நிர்வாக அலுவலர் முத்துசெல்வனிடம் தகவல் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வீ.கே.புதூர் இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ் தலைமையில் சென்று பார்த்தபோது சுமார் 45 வயது மதிக்கதக்க ஒரு பெண்ணின் எலும்புகூடு என தெரிய வந்தது.உடம்பு முழுவதும் மக்கிப் போன நிலையில் எலும்புக்கூடு மட்டும் கிடந்தது. கூட்டின் மேல் ஆரஞ்ச் கலர் சேலையும், சந்தன கலர் ஜாக்கெட்டும், பிரவுன் கலர் பாவாடையும் இருந்தன. கழுத்தில் தாயத்துடன் கூடிய கருப்பு கயிறும் மட்கிய நிலையில் கிடந்தது. கையில் அலுமினிய வளையல்கள் இருந்தன. இறந்து நான்கு மாதங்களுக்கு மேல் இருக்கலாம் என தெரிகிறது.தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகராஜன் வழக்குபதிவு செய்தார். எலும்புக்கூடு கைப்பற்றப்பட்டு பாளை., ஐகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது கொலையா அல்லது தற்கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நன்றி: தினமலர் 

வீ.கே.புதூரில் விழிப்புணர்வு பேரணி

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூரில் மூளையசதி நோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடந்தது. வீரகேரளம்புதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் கல்லூரி சார்பில் மூளையசதி நோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடந்தது. கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை வீரகேரளம்புதூர் தாசில்தார் சுமங்கலி கொடியசைத்து துவங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஏஞ்சல்ராணி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகராஜன் முன்னிலை வகித்தனர். பேரணி தாலுகா அலுவலகம் முன் துவங்கி போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. மூளையசதி நோய் குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் நிறைந்த அட்டைகளை ஏந்தி வந்த மாணவியர் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகித்தனர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு முதல்வர் ஏஞ்சல்ராணி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அன்னலெட்சுமி வரவேற்றார். மூளையசதி நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மாணவிகளின் குறுநாடகம் மற்றும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் சமாதானப்பிரியா நன்றி கூறினார்.
நன்றி: தினமலர் 

Saturday, September 17, 2011

வீ.கே.புதூர் உச்சிமாகாளி அம்மன் கோயிலில் கொடை விழா

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா நடந்தது. வீரகேரளம்புதூர் சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உச்சிமாகாளி அம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. தொடர்ந்து கடந்த 9ம் தேதி மாலை 6 மணிக்கு 508 திருவிளக்கு பூஜை நடந்தது. 12ம் தேதி மாலை 5 மணிக்கு குற்றால தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வரும் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இரவு 8 மணிக்கு 2010-11ம் ஆண்டு 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற வீரகேரளம்புதூர் சேனைத்தலைவர் சமுதாய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வருஷாபிஷேகமும், உச்சிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும், சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு சமுதாய மண்டபத்தில் இருந்து பால்குடம் மற்றும் கன்னியாகுமரி தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வருதலும், பால்குடம் மற்றும் தீர்த்தங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பொங்கலிடுதலும், இரவு 9 மணிக்கு செண்டா மேளம் முழங்க தீச்சட்டி ஏந்தி வலம் வந்து பக்தர்கள் நேர்த்தி செலுத்தினர். இரவு 12 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நற்று காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி வந்து கரைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. வரும் 20ம் தேதி எட்டாம் திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சமுதாய நாட்டாண்மை நயினார் தலைமையில் வீரகேரளம்புதூர் சேனைத்தலைவர் சமுதாயத்தினர் செய்தனர்.
நன்றி : தினமலர் 

Thursday, September 8, 2011

வீ.கே.புதூர் உச்சிமகாளி அம்மன் கோயிலில் 13ம் தேதி கொடை விழா

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் உச்சிமாகாளி அம்மன் கோவில் திருவிழா கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. வீரகேரளம்புதூரில் உச்சிமாகாளி அம்மன் கோயில் ஆவணி கொடைவிழா கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நாளை (9ம் தேதி) மாலை 5 மணிக்கு 508 திருவிளக்கு பூஜை நடக்கிறது. 12ம் தேதி மாலை குற்றால தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வரும் நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி தீப ஆராதனையும் நடக்கிறது. அன்று இரவு 10மணிக்கு 2010-11ம் ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் வீ.கே.புதூர் சேனைத்தலைவர் சமுதாய மாணவ மாணவிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. 13ம் தேதி காலை 6.30 மணிக்கு வருஷாபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன. காலை 9 மணிக்கு சமுதாய மண்டபத்தில் இருந்து பால்குடம் மற்றும் கன்னியாகுமரி தீர்த்தம் எடுத்து ஊர்பவனி வரும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால்குடம், தீர்த்தங்கள், அபிஷேகங்களும், அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு பொங்கலிம் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு தீச்சட்டி எடுத்து ஊர்பவனி வருதலும், 12 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் வலம் வருதலும், கிடாய் வெட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 14ம் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டும், முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை நாட்டாமை நயினார் தலைமையில் வீரகேரளம்புதூர் சேனைத்தலைவர் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.
நன்றி : தினமலர் 

Thursday, June 16, 2011

வீ.கே.புதூரில் ஜமாபந்தி நிறைவு


வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு பெற்றது.

வீ.கே.புதூர் வட்டாரத்திற்கான 1420ம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்வுகள் நான்கு நாட்கள் நடந்தன. குறுவட்ட வாரியாக கிராம கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்து வருவாய்த்துறை சம்பந்தமாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

முதல் நாளில் சுரண்டை குறுவட்டத்தில் அடங்கிய சிவகுருநாதபுரம், சுரண்டை பகுதி 1, 2, ஜமீன் சுரண்டை, ஆனைகுளம், குலையநேரி கிராமங்களின் கணக்குகளும், இரண்டாம் நாளில் வீ.கே.புதூர் குறுவட்டத்தில் அடங்கிய வீ.கே.புதூர் வெள்ளகால், ராஜகோபாலப்பேரி, அகரம், வீராணம் கிராம கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன.

மூன்றாம் நாளில் கருவந்தா குறுவட்டத்தில் அடங்கிய கருவந்தா, மேல மற்றும் கீழக்கலங்கல், நவநீதகிருஷ்ணாபுரம், குறிச்சாம்பட்டி, வாடி, அச்சங்குட்டம் கிராமங்களுக்கும், நான்காம் நாளில் ஊத்துமலை குறுவட்டத்தில் அடங்கிய ஊத்துமலை, வடக்குகாவலாகுறிச்சி, ஊத்துமலை, மேலமருதப்பபுரம், பலபத்திரராமபுரம், மருக்காலன்குளம், முத்தம்மாள்புரம் கிராம கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன.

பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 1029 மனுக்கள் பெறப்பட்டன. முதியோர் உதவித் தொகை வேண்டி மட்டும் 713 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 3 பேருக்கு உடனடியாக முதியோர் உதவித் தொகை வழங்கவும், 37 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டது. ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றம் வேண்டி பெறப்பட்ட 7 மனுக்களின் மீதும் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்ற மனுக்களின் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தீர்வாய அலுவலர் செல்வராஜ் உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் மணிபாபு, தலைமையிடத்து துணை தாசில்தார் சிவசுப்பிரமணியன், மண்டல துணை தாசில்தார் சுதந்திரம், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பால்துரை, வட்ட வழங்கல் அலுவலர் சேதுராமலிங்கம், வருவாய் ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன், மாரியப்பன், அகமது, சிவில் சப்ளை தனி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
 நன்றி : தினமலர் 

வீ.கே.புதூரில் அரசு மகளிர் விடுதி அமைக்க கோரிக்கை

வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூரில் அரசினர் மகளிர் விடுதி அமைக்க ஜமாபந்தி நிகழ்ச்சியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வீ.கே.புதூர் பொதுமக்களின் சார்பில் பஞ்., துணைத் தலைவர் செந்தில்குமார் வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

வீ.கே.புதூர் தாலுகா தலைநகராகும். இங்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசு தொழிற்பயிற்சி பள்ளி, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியன உள்ளன. இங்கு பயிலும் மாணவர்களுக்கென அரசினர் பள்ளி மாணவர் விடுதியும், அரசினர் தொழிற்பயிற்சி மாணவர் விடுதியும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இங்கு தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனர். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 30 சதவீத இட ஒதுக்கீடு மகளிருக்காக உள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இங்குள்ள கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். நெல்லை பேட்டையை அடுத்து அருகில் எங்கும் மகளிர் விடுதிகள் இல்லை.

எனவே வீ.கே.புதூரில் அரசினர் மாணவியர் விடுதி அமைத்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த அனைவருக்கும் பேருதவியாக இருக்கும். சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த மாணவிகளும் இங்கு தங்கியிருந்து கல்வி பயில வசதியாக இருக்கும்.

எனவே உடனடியாக மாணவியர் விடுதி அமைக்க வேண்டும் என மனுவின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் 

Monday, June 6, 2011

வீ.கே.புதூர் கல்லூரியில் இலவச சிகிச்சை மையம் திறப்பு

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்பதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் பயிற்சி கல்லூரியில் புகையிலை ஒழிப்பு இலவச சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே 31ம் நாள் புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையில் 4,000 விதமான நச்சுப் பொருட்கள் உள்ளன. இதில் 56 வகைகள் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. ஒரு சிகரெட் மனிதனின் வாழ்நாளில் 7 நிமிடத்தை குறைக்கிறது. இந்தியாவில் தினமும் 2,500 பேர் புகையிலை பயன்படுத்தியதால் இறக்கின்றனர். புகையிலை புகைப்பவர்களை மட்டுமன்றி சுவாசிக்கின்ற மற்றவர்களுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புகையிலை ஒழிப்பு தினம் வீ.கே.புதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் கல்லூரியில் கடைபிடிக்கப்பட்டது. புகையிலை ஒழிப்பு இலவச சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மரியதங்கராஜ் மையத்தை திறந்து வைத்து புகையிலையினால் ஏற்படும் தீங்குகள் குறித்து பேசினார். தொடர்ந்து செவிலியர் கல்லூரி மற்றும் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டையை ஏந்தி, கோஷங்களை எழுப்பி ஊர்வலம் வந்தனர். புகையிலை பயன்படுத்துவோர் குறித்து சர்வே எடுக்கப்பட்டு விபரம் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து வேலை நாட்களிலும் புகையிலையை பயன்படுத்துவோருக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும் என நர்சிங் பயிற்சிக் கல்லூரி முதல்வர் ஏஞ்சல்ராணி தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர் 

Thursday, June 2, 2011

வருவாய் தீர்வாய முகாம் வீ.கே.புதூரில் 8ல் துவக்கம்

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாய முகாம் 8ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது. வீரகேரளம்புதூர் தாலுகாவில் குறுவட்ட அளவிலான 1420ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய முகாம் நடைபெறுகிறது. இதில் வருவாய்த்துறை தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும். தினமும் காலை 9 மணிக்கு துவங்கும் இம்முகாமில் வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கலந்து கொள்கிறார். வரும் 8ம் தேதி சுரண்டை குறுவட்டத்தில் அடங்கிய சுரண்டை பகுதி1 மற்றும் 2, சிவகுருநாதபுரம், ஆனைகுளம், குலையநேரி, ஜமீன், சுரண்டை பகுதிகளுக்கும், 9ம் தேதி வீரகேரளம்புதூர் குறுவட்டத்தில் அடங்கிய வெள்ளகால், வீரகேரளம்புதூர், ராஜகோபாலப்பேரி, அகரம், வீராணம் பகுதிகளுக்கும் நடக்கிறது. 10ம் தேதி கருவந்தா குறுவட்டத்தில் அடங்கிய மேலக்கலங்கல், கீழக்கலங்கல், நவநீதகிருஷ்ணாபுரம், குறிச்சாம்பட்டி, கருவந்தா, வாடி, அச்சங்குட்டம் பகுதிகளுக்கும், 14ம் தேதி ஊத்துமலை குறுவட்டத்தில் அடங்கிய வடக்கு காவலாகுறிச்சி, ஊத்துமலை, மேலமருதப்பபுரம், பலபத்திரராமபுரம், மருக்காலன்குளம், முத்தம்மாள்புரம் கிராமங்களுக்கும் நடக்கிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தாசில்தார் மணிபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.
நன்றி : தினமலர் 

Sunday, May 29, 2011

வீ.கே.புதூரில் மக்கள் நலப்பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூரில் மக்கள் நலப்பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். வீரகேரளம்புதூர் பஞ்., மக்கள் நலப்பணியாளராக பணிபுரிபவர் ஸ்டெல்லாமேரி. இவரிடம் இதே ஊரில் லோடுமேன் வேலை பார்க்கும் சக்திவேல்முருகன் (38) செல்போனில் ஆபாசமாக பேசினாராம். இதுகுறித்து ஸ்டெல்லாமேரி போலீசில் தெரிவித்தார். போலீசார் சக்திவேல்முருகனை அழைத்து இதுபோல் இனி நடக்க கூடாது என கூறி அனுப்பினார்களாம். இந்நிலையில் ஸ்டெல்லாமேரியை வழியில் கண்ட சக்திவேல்முருகன், "போலீசிடமா போகிறாய், உன்னை வெட்டிக் கொன்றுவிடுவேன்' என மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மேரி மீண்டும் போலீசில் புகார் செய்தார். வீரகேரளம்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் சீனியம்மாள் வழக்குபதிவு செய்து சக்திவேல்முருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
நன்றி : தினமலர் 

Friday, May 27, 2011

குண்டும், குழியுமான புழுதி பறக்கும் சாலை : வீ.கே.புதூர் பொதுமக்கள் அவதி

வீரகேரளம்புதூர் : குண்டும், குழியுமான புழுதி பறக்கும் வீ.கே.புதூர் மெயின்ரோட்டை சீரமைக்க வேண்டுமென வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாலுகா தலைநகரமான வீரகேரளம்புதூர் சுரண்டை - நெல்லை மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. தாலுகா அலுவலகம், சார்நிலை கருவூலம், கனரா பாங்க், தபால் அலுவலகம், இளநிலை மின்பொறியாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், அரசு மேல்நிலைப்பள்ளி, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் பயிற்சி கல்லூரி, தனியார் பால் பதப்படுத்தும் நிலையங்கள் ஆகியவை இங்கு இயங்கி வருகின்றன.
இதனால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களும், அருகிலுள்ள வீராணம் பகுதியில் அமைந்துள்ள காற்றாடி மின் உற்பத்தி நிலையங்களுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களும் இந்த ரோட்டை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன் வாசுதேவநல்லூர் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் அமைக்கும் பணிக்காக ரோடு நெடுகிலும் குழி தோண்டப்பட்டது.
இக்குழிகள் சரிவர மூடப்படாததாலும், ரோடு சீரமைக்கப்படாததாலும் தாலுகா அலுவலகம் முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை ரோடு முழுவதும் பல்லாங்குழிகளாவே காட்சியளிக்கிறது. கடந்த மழைக்காலத்தில் சகதி குளமாக காட்சி தந்த ரோடு, தற்போது புழுதி மண்டலமாக மாறிவிட்டது. குழாய்களின் இணைப்புகளில் அடிக்கடி தண்ணீர் கசிவு ஏற்படுவதால் மீண்டும் மீண்டும் தோண்டப்படுகிறது.
இதனால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துடனும், கவனத்துடனும் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வாகனங்கள் கடந்து செல்லும் போது உருவாகும் புகை மண்டலம் அலர்ஜி, ஆஸ்துமா, இளைப்பு போன்ற நோய்களை உருவாக்குகிறது. கடைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும், நடந்து செல்லும் பாதசாரிகளும், பயணம் செய்யும் பயணிகளும் குறிப்பாக முதியோர்களும் இதனால் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
எனவே மீண்டும் மீண்டும் தோண்டாதவாறு குழாய்களில் கசிவை சீர்படுத்தி ரோட்டை செப்பனிட்டு புதிய தார்ரோடு அமைத்து தரவேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வீரகேரளம்புதூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் தேர்தலுக்கு முன் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இன்னும் ரோடு சரி செய்யப்படவில்லை. எனவே அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த சங்கம் சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் 

Saturday, May 14, 2011

தென்காசி - தொகுதி (வீரகேரளம்புதூர் தாலுக்கா )



திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். தொகுதி எல்லைக‌ள்: வீரகேரளம்புதூர் தாலுக்கா தென்காசி தாலுக்கா (பகுதி) குத்துக்கல்வலசை, பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குணராமநல்லூர், பாட்டப்பத்து, குற்றாலம், குற்றாலம் சரிவு (ஆர்.எம்.), ஆயிரப்பேரி, மத்தளம்பாறை, சில்லரைப்பரவு, கல்லூரணி, திப்பனம்பட்டி மற்றும், ஆவுடையானூர் கிராமங்கள், தென்காசி (நகராட்சி), சுந்தரபாண்டியபுரம் (பேரூராட்சி), இலஞ்சி (பேரூராட்சி), மேலகரம் (பேரூராட்சி) மற்றும் குற்றாலம் (பேரூராட்சி).1-வாக்குப்பதிவு சதவீதம்:
78.8%
மாவட்டம்
:
திருநெல்வேலி
மொத்த வாக்காளர்கள்
:
211903
ஆண் வாக்காளர்கள்
:
106025
பெண் வாக்காளர்கள்
:
105878
திருநங்கை வாக்காளர்கள்
:
0
தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்
சரத்குமார்

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது:
சரத்குமார் - சமத்துவ மக்கள் கட்சி - 92253 - 
மற்றவர்கள் நிலவரம்:
கருப்பசாமி பாண்டியன் வீ. - தி.மு.க. - 69286
அன்புராஜ் எஸ்.வி. - பா.ஜனதா - 2698
நன்றி : மலை மலர் 

Monday, April 18, 2011

விவசாயம் செழிக்க விரைவான நடவடிக்கை : நம்மாழ்வார்.


"கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி' என்று போற்றப்படும் விவசாயிகள் நலன் பெறவும், விவசாயம் செழித்திடவும், அடுத்து அமையும் அரசு செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிடுகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

வேளாண்மைக்கு அடிப்படையானது விளைநிலம். வேளாண்மைக்குரிய நிலங்களை வேளாண்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற பிற பயன்பாடுகளுக்கு, விளை நிலத்தை எடுப்பதை, முதலில் தடை செய்ய வேண்டும்.கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில், 100 நாள் வேலையை எப்போது செய்ய வேண்டும் என்பதை, கிராம சபைகள் முடிவு செய்ய வேண்டும். அப்போது தான், வேளாண்மை தொழிலை கிராம மக்கள் தடையில்லாமல் செய்ய முடியும்.தமிழகத்துக்கும், கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வரும் நதிநீர்ப் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க, மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கைக்காக, அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும் ஒன்றுபட்டு பார்லிமென்டை புறக்கணிக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வார வேண்டும். அப்போது தான், கடைமடை விவசாயிக்கும் தாராளமாக நீர் சென்றடையும். இப்பணிகளை உழவர் பிரதிநிதிகள் மூலம் செயல்படுத்த வேண்டும். ஏரி, குளங்களில் உள்ள கருவேலம் மரங்களை அகற்ற வேண்டும். அப்போது தான், குளங்களில் தேக்கப்படும் நீரை, வேளாண்மைக்கு முழுமையாகப் பயன்படுத்த முடியும்.காவிரி ஆற்றில், கொள்ளிடம் பகுதியில், 17 கதவணைகளை அமைக்க வேண்டும் என, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன்மூலம், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, கதவணைகளை மூடியும், பிற சமயங்களில் திறந்தும் நீரைச் சேகரித்து பயன்படுத்த முடியும். கடலை நோக்கிச் செல்லும் காட்டாற்று நீரை தேக்கி பயன்படுத்த, தடுப்பணைகள் கட்ட வேண்டியது அவசியம்.

பால், உரமாக பயன்படும் எருவை வழங்கும் மாடுகளை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை அரசு தடை செய்ய வேண்டும். கிராமப்புற ஆண்களும், பெண்களும் கொண்ட குழுக்களை அமைத்து, அக்குழுவிடம், மாடு வளர்ப்பதை ஒப்படைக்க வேண்டும். இதற்கு அரசு நிதியுதவியும் வழங்க வேண்டும்.ஆறு, ஏரி, குளம் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் வகையில் உருவாக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே, இயங்கி வரும் ஆலைகள் குறித்து கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு முடியும் வரை, அந்த ஆலைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏரி, குளங்களில் மீன் வளர்ப்புக்கு ஊக்கம் அளிப்பதோடு, மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் அப்பணியை ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம், கிராமப்புற மக்களிடம் நிலவி வரும் சத்துணவு குறைபாடுகளைப் போக்க முடியும்.

தோட்டக்கலையில், சவுக்கு, மூங்கில் உள்ளிட்ட மரங்கள் மற்றும் மாம்பழம் போன்ற பழ வகைகள் சாகுபடியை பெருக்க வேண்டும். நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோல், அனைத்து பயிர்களையும் கொள்முதல் செய்ய புதிய மையங்களையும் தொடங்க வேண்டும்.
ஊராட்சிகளில் உழவர் ஆலோசனை மற்றும் சேவை மையங்களைத் தொடங்க வேண்டும். இதன் மூலமே, சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருள்கள் வழங்கலாம்; பயிர் சாகுபடி பற்றி ஆலோசனைகளை அளிக்கலாம்; வேளாண்மை கருவிகளை வழங்கலாம்.வெள்ளப்பெருக்கு காலங்களில், பயிர் சேதங்களைத் தடுக்க பாரம்பரியப் பயிர்களை சாகுபடி செய்ய ஊக்கம் அளிக்க வேண்டும். ஒற்றை நாற்று முறை மூலம் நெல் உற்பத்தி 3 டன் முதல் 5 டன் எக்டேருக்கு அதிகரித்துள்ளது. இதை நாடு முழுவதும் பரப்புவதன் மூலம், அரிசி தட்டுப்பாட்டைப் போக்க முடியும். ஒற்றை நாற்று முறையை, மற்ற பயிர்களிலும் அறிமுகம் செய்ய வேண்டும்.

சோளம், கம்பு, தினை, சாமை போன்ற சத்துணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும். தரிசாக உள்ள நிலங்களில், இதன் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கலாம்.தேசிய பல்லின பன்மை வாரியத்தை தமிழகத்துக்கு என அமைக்க வேண்டும். மரபின மாற்றுப் பயிர்களை தடை செய்ய வேண்டும். மாநில பட்டியலில் தான் வேளாண்மை உள்ளது. எனவே, இந்த நடவடிக்கையை மாநில அரசே செய்ய முடியும். மரபின மாற்றுப் பயிர்களால் புற்றுநோய் உள்ளிட்ட உயிர் குடிக்கும் நோய்கள் பரவும் என்பதால், அதன் ஆராய்ச்சிக்கும் தடை விதிக்க வேண்டும்.

கால்நடை மற்றும் விதைப் பண்ணைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இவற்றை நஷ்டத்தில் இருந்து மீட்கவும், அதன் மூலம் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், மகளின் சுயஉதவிக் குழுக்களிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும். இயற்கை வேளாண்மை வெற்றியடைந்து வரும் இந்த வேளையில், அதை விரிவுபடுத்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.சொட்டுநீர், தெளிப்புநீர் பாசன வசதிகளை எற்படுத்த, 100 சதவீத மானியத்தையும் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். ரசாயன உரங்களைப் பயன்படுத்த அளிக்கப்படும் மானியத்தை, இயற்கை வழி வேளாண்மையைச் செய்யும் விவசாயிக்கும் அளிக்க வேண்டும்.இவற்றை அடுத்து அமையும் அரசு விரைவாகச் செய்யுமானால், "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?' என்ற பாடல் வரிகளை உண்மையாக்க முடியும்.

நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி.