Friday, July 5, 2013

வீ.கே.புதூரில் கிளை நூலக புதிய கட்டடம் திறப்பு விழா

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் கிளை நூலகத்தில் புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது.

முழுநேர நூலகமான வீரகேரளம்புதூர் கிளை நூலகம் 600 சதுர அடி கொண்ட சிறிய கட்டடத்தில் இயங்கி வந்தது. வாசகர்கள் அமர்ந்து படிக்க இடம் இல்லாமல் நின்று கொண்டே படிக்க வேண்டிய ‹ழ்நிலை இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து, இந்நூலகம் புதிய கட்டடத்திற்கு மாற்றும் பணி துவங்கி அதன் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு வீரகேரளம்புதூர் பஞ்., தலைவர் மருதப்பாண்டியன் (எ) பாபுராஜா தலைமை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, மாவட்ட காங்., செயலாளர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட தலைவர் வக்கீல் சுப்பையா வரவேற்றார். வீரகேரளம்புதூர் தாசில்தார் குருச்சந்திரன் புதிய கட்டடத்தை திறந்துவைத்தார். ராஜகோபாலப்பேரி பஞ்., தலைவர் ஜாண், வியாபாரிகள் சங்க தலைவர் அருணாசலம் யோகீஸ்வரர், சேசுராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஏசுப்பாண்டி, ஆண்டபெருமாள், ஐயம்மாள், தொடக்க வேளாண்மை கடன் சங்கத் தலைவர் வேலுச்சாமிபாண்டியன், முத்துராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளை நூலகர் வெற்றிவேலன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை கிளை நூலகர் திருமலை நம்பி தலைமையில் உதவியாளர்கள் கைலாசம், சங்கீதா செய்திருந்தனர்.

நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment