Friday, July 5, 2013

வீரகேரளம்புதூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூரில் தமிழ்நாடு வி.ஏ.ஓ.,க்கள் சங்கம் மற்றும் கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக முதல்வரின் கவனத்திற்கு தங்கள் கோரிக்கைகளைக் கொண்டு செல்லும் விதமாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வி.ஏ.ஓ., சங்க தாலுகா தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். சங்கத்தலைவர் வேல்ச்சாமி முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். வங்கிகள் மூலம் சம்பளம் வழங்கும் முறையால் காலதாமதம் ஏற்படுவதால் அம்முறையை ரத்துசெய்யவேண்டும். வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர்களுக்கு நியாயமான பணி உயர்வு வழங்கிட வேண்டும். அங்கீகாரம் பெற்ற சங்கங்களுக்கு கூட்டுக்கலந்தாய்வுக்கு நாள் ஒதுக்க வேண்டும். உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து அலுவலர்களும், உதவியாளர்களும் கலந்து கொண்டனர். கிராம உதவியாளர் பரமசிவன் நன்றி கூறினார்.
நன்றி : தினமலர் 

வீ.கே.புதூரில் கிளை நூலக புதிய கட்டடம் திறப்பு விழா

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் கிளை நூலகத்தில் புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது.

முழுநேர நூலகமான வீரகேரளம்புதூர் கிளை நூலகம் 600 சதுர அடி கொண்ட சிறிய கட்டடத்தில் இயங்கி வந்தது. வாசகர்கள் அமர்ந்து படிக்க இடம் இல்லாமல் நின்று கொண்டே படிக்க வேண்டிய ‹ழ்நிலை இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து, இந்நூலகம் புதிய கட்டடத்திற்கு மாற்றும் பணி துவங்கி அதன் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு வீரகேரளம்புதூர் பஞ்., தலைவர் மருதப்பாண்டியன் (எ) பாபுராஜா தலைமை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, மாவட்ட காங்., செயலாளர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட தலைவர் வக்கீல் சுப்பையா வரவேற்றார். வீரகேரளம்புதூர் தாசில்தார் குருச்சந்திரன் புதிய கட்டடத்தை திறந்துவைத்தார். ராஜகோபாலப்பேரி பஞ்., தலைவர் ஜாண், வியாபாரிகள் சங்க தலைவர் அருணாசலம் யோகீஸ்வரர், சேசுராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஏசுப்பாண்டி, ஆண்டபெருமாள், ஐயம்மாள், தொடக்க வேளாண்மை கடன் சங்கத் தலைவர் வேலுச்சாமிபாண்டியன், முத்துராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளை நூலகர் வெற்றிவேலன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை கிளை நூலகர் திருமலை நம்பி தலைமையில் உதவியாளர்கள் கைலாசம், சங்கீதா செய்திருந்தனர்.

நன்றி : தினமலர் 

Sunday, June 2, 2013

வீரகேரளம்புதூரில் பைக் திருடிய2 பேர் கைது

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் பைக் திருடிய திருடர்களை போலீசார் கைது செய்தனர்.வீரகேரளம்புதூர் கோட்டை அண்ணா நகர் அருகில் சுரண்டை இன்ஸ்பெக்டர் ஜமால், எஸ்.ஐ., சுந்தர் மூர்த்தி, போலீசார் சசிகுமார் மற்றும் அந்தோணி பாஸ்கர் வாகன பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே நம்பர் பிளேட் இல்லாத வண்டியை ஓட்டிவந்த வடகரையைச் சேர்ந்த மனோகரன் (எ) முகம்மது ரியாஸ்தீன் (38), சங்கரன்கோவிலை அடுத்த பெருங்கோட்டூரைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் வேலுச்சாமி (49) ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் ராஜபாண்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது எக்ஸெல் வண்டியைத் திருடி, நம்பர் பிளேட்டைக் கழட்டி ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து ஹோண்டா சைன் பைக்கும் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

நன்றி : தினமலர் 

வீரகேரளம்புதூர் புனித அந்தோணியார்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.இப்பள்ளியில் 151 மாணவிகள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி சீதாலெட்சுமி தமிழ் 97, ஆங்கிலம் - 84, கணிதம் - 100, அறிவியல் - 99, சமூக அறிவியல் - 98 மதிப்பெண்களுடன் மொத்தம் 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவி ஆபிதா தமிழ் 91, ஆங்கிலம் - 85, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 100 மொத்தம் 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளார்.மாணவி மணிமேகலை தமிழ் - 94, ஆங்கிலம் - 87, கணிதம் - 96, அறிவியல் - 98, சமூக அறிவியல் - 98 மொத்தம் 473 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார். மாணவி ஆனந்தி கணிதம் அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் நூறு சதவிகித மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவிகளை தாளாளர் மேரிடெய்சி ராஜம்மாள், தலைமை ஆசிரியை காளியம்மாள் மற்றம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

நன்றி : தினமலர் 

Wednesday, March 20, 2013

இலங்கை அரசை கண்டித்து வீ.கே.புதூரில் திமுக பொதுக் கூட்டம்

வீரகேரளம்புதூர்:இலங்கை அரசுக்கு எதிராக ஐநாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மாற்றங்களுடன் மத்திய அரசு ஆதரிக்க கோரி வீரகேரளம்புதூரில் திமுக பொதுக்கூட்டம் நடந்தது.

ஒன்றிய பிரதிநிதி சங்கரன் கொத்தனார் தலைமை வகித்தார். கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சிவபத்மநாதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலிங்கப்பட்டி சுப்பிரமணியன், சுரண்டை நகர செயலாளர் முத்துக்குமார், வெற்றிலை சுப்பையா, முருகன், கோமதி சங்கர், அண்ணாமலை, மணி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மாரியப்பன் வரவேற்றார்.

தமிழினத்தை அழிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை திமுக தலைவர் கருணாநிதி கோரும் மாற்றங்களுடன் ஆதரிக்க மத்திய அரசை வலியுறுத்தி தூத்துக்குடி சரத்பாலா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பரசுராமன் உட்பட பலர் சிறப்புரையாற்றினர்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பழகன் மீனவரணி துணை அமைப்பாளர் பாஸ்கல், கலை இலக்கியப் பேரவை செயலாளர் ஜெயபாலன், கிளைக் கழக செயலாளர்கள் அதிசயபுரம் சைமன் அமிர்தம், தெய்வராஜ், ராஜகோபாலப்பேரி சாமி, ஜோதிராஜ், ராஜபாண்டி ராமையா பாண்டியன், செம்புலிப்பட்டணம் தங்கதுரை, கலிங்கப்பட்டி சுப்பையா பாண்டியன், கழுநீர்குளம் இஸ்மாயில், அத்தியூத்து இஸ்மாயில், தாயார் தோப்பு டாண் ஆசிர், கல்லூத்து முருகன், ஜோதிராஜ், முகமது மல்கான், ராமர் உட்பட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பரமசிவம் நன்றி கூறினார்.
நன்றி: தினமலர் 

வீ.கே.புதூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூரில் அரசு ஐடிஐ மாணவர்கள் இலங்கை அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தமிழினத்தை படுகொலை செய்யும் இலங்கை அரசைக் கண்டித்தும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கவும் வற்புறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வீரகேரளம்புதூர் அரசு ஐடிஐ மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இலங்கை அரசு, அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தாசில்தார் குருச்சந்திரன், ஐடிஐ அலுவலர் மாடசாமி மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களின் உணர்வுகளை அரசுக்கு தெரிவிப்பதாகத் தெரிவித்தனர்.

கோஷங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்ட மாணவர்கள் போஸ்ட் ஆபீஸ் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். 
நன்றி : தினமலர் 

Thursday, January 24, 2013

இலவச கண் சிகிச்சை முகாம்

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா அச்சங்குட்டம் பஞ்சாயத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், ஆலங்குளம் மற்றும் வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இலவச கண் சிகிச்சை முகாம் அச்சங்குட்டம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது. முகாமினை பஞ். தலைவர் வெள்ளத்துரை துவக்கி வைத்தார். டாக்டர் சரவணன் தலைமையிலான மருத்துவர்கள் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். கண்புரை நோய் உள்ளவர்கள் இலவச மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
முகாமில் சுகாதார ஆய்வாளர் காந்திநாத், உதவியாளர்கள் விமலாமணி, ராஜம்மாள், பஞ். துணைத்தலைவர் ஜெயலட்சுமி, உறுப்பினர்கள் பவானி, குத்தாலிங்கம், சுதன், சேர்மக்கனி, திருமலையாண்டி, ராஜன், கருப்பசாமி மற்றும் ஊராட்சி செயலர் வைத்திலிங்கம் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நன்றி  :தினமலர் 

வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தின் சார்பில் வாக்காளர் தின விழா

வீரகேரம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தின் சார்பில் வாக்காளர் தின விழா, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் துவக்கப்பட்ட ஜனவரி 25, 1950ஐ நினைவு கூறும் விதமாக தேசிய வாக்காளர் தினம் கடந்த 2011ம் ஆண்டு முதல் ஜனவரி 25ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. வாக்காளரின் கடமையையும், உரிமையையும் குறித்த விழிப்புணர்ச்சியை பள்ளி, மாணவ, மாணவிகள் முதல் ஏற்படுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது.

வீரகேரளம்புதூர் தாலுகா சார்பில் வாக்காளர் தினவிழா, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவிற்கு தாசில்தார் குருச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் குமார்பாண்டியன், சிறப்பு திட்ட அமலாக்க துணைத் தாசில்தார் ராஜூ முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஜான் வரவேற்றார். வாக்காளரின் உரிமைகள் மற்றும் கடமைகள் என்ற தலைப்பில் மாணவர்களிடையே பேச்சுபுபோட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாசில்தார் பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து மாணவர்கள் பங்கு கொண்ட வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி நடந்தது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் அடங்கிய பேனர்களையும், அட்டைகளையும் ஏந்தி, விழிப்புணர்வுக் கோஷங்கள் இட்ட வண்ணம் மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர். பள்ளியில் தொடங்கிய பேரணி முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்து தாலுகா அலுவலகத்தை அடைந்தது. தாசில்தார், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.

நன்றி : தினமலர்