Sunday, May 29, 2011

வீ.கே.புதூரில் மக்கள் நலப்பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூரில் மக்கள் நலப்பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். வீரகேரளம்புதூர் பஞ்., மக்கள் நலப்பணியாளராக பணிபுரிபவர் ஸ்டெல்லாமேரி. இவரிடம் இதே ஊரில் லோடுமேன் வேலை பார்க்கும் சக்திவேல்முருகன் (38) செல்போனில் ஆபாசமாக பேசினாராம். இதுகுறித்து ஸ்டெல்லாமேரி போலீசில் தெரிவித்தார். போலீசார் சக்திவேல்முருகனை அழைத்து இதுபோல் இனி நடக்க கூடாது என கூறி அனுப்பினார்களாம். இந்நிலையில் ஸ்டெல்லாமேரியை வழியில் கண்ட சக்திவேல்முருகன், "போலீசிடமா போகிறாய், உன்னை வெட்டிக் கொன்றுவிடுவேன்' என மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மேரி மீண்டும் போலீசில் புகார் செய்தார். வீரகேரளம்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் சீனியம்மாள் வழக்குபதிவு செய்து சக்திவேல்முருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
நன்றி : தினமலர் 

Friday, May 27, 2011

குண்டும், குழியுமான புழுதி பறக்கும் சாலை : வீ.கே.புதூர் பொதுமக்கள் அவதி

வீரகேரளம்புதூர் : குண்டும், குழியுமான புழுதி பறக்கும் வீ.கே.புதூர் மெயின்ரோட்டை சீரமைக்க வேண்டுமென வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாலுகா தலைநகரமான வீரகேரளம்புதூர் சுரண்டை - நெல்லை மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. தாலுகா அலுவலகம், சார்நிலை கருவூலம், கனரா பாங்க், தபால் அலுவலகம், இளநிலை மின்பொறியாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், அரசு மேல்நிலைப்பள்ளி, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் பயிற்சி கல்லூரி, தனியார் பால் பதப்படுத்தும் நிலையங்கள் ஆகியவை இங்கு இயங்கி வருகின்றன.
இதனால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களும், அருகிலுள்ள வீராணம் பகுதியில் அமைந்துள்ள காற்றாடி மின் உற்பத்தி நிலையங்களுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களும் இந்த ரோட்டை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன் வாசுதேவநல்லூர் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் அமைக்கும் பணிக்காக ரோடு நெடுகிலும் குழி தோண்டப்பட்டது.
இக்குழிகள் சரிவர மூடப்படாததாலும், ரோடு சீரமைக்கப்படாததாலும் தாலுகா அலுவலகம் முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை ரோடு முழுவதும் பல்லாங்குழிகளாவே காட்சியளிக்கிறது. கடந்த மழைக்காலத்தில் சகதி குளமாக காட்சி தந்த ரோடு, தற்போது புழுதி மண்டலமாக மாறிவிட்டது. குழாய்களின் இணைப்புகளில் அடிக்கடி தண்ணீர் கசிவு ஏற்படுவதால் மீண்டும் மீண்டும் தோண்டப்படுகிறது.
இதனால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துடனும், கவனத்துடனும் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வாகனங்கள் கடந்து செல்லும் போது உருவாகும் புகை மண்டலம் அலர்ஜி, ஆஸ்துமா, இளைப்பு போன்ற நோய்களை உருவாக்குகிறது. கடைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும், நடந்து செல்லும் பாதசாரிகளும், பயணம் செய்யும் பயணிகளும் குறிப்பாக முதியோர்களும் இதனால் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
எனவே மீண்டும் மீண்டும் தோண்டாதவாறு குழாய்களில் கசிவை சீர்படுத்தி ரோட்டை செப்பனிட்டு புதிய தார்ரோடு அமைத்து தரவேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வீரகேரளம்புதூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் தேர்தலுக்கு முன் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இன்னும் ரோடு சரி செய்யப்படவில்லை. எனவே அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த சங்கம் சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் 

Saturday, May 14, 2011

தென்காசி - தொகுதி (வீரகேரளம்புதூர் தாலுக்கா )



திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். தொகுதி எல்லைக‌ள்: வீரகேரளம்புதூர் தாலுக்கா தென்காசி தாலுக்கா (பகுதி) குத்துக்கல்வலசை, பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குணராமநல்லூர், பாட்டப்பத்து, குற்றாலம், குற்றாலம் சரிவு (ஆர்.எம்.), ஆயிரப்பேரி, மத்தளம்பாறை, சில்லரைப்பரவு, கல்லூரணி, திப்பனம்பட்டி மற்றும், ஆவுடையானூர் கிராமங்கள், தென்காசி (நகராட்சி), சுந்தரபாண்டியபுரம் (பேரூராட்சி), இலஞ்சி (பேரூராட்சி), மேலகரம் (பேரூராட்சி) மற்றும் குற்றாலம் (பேரூராட்சி).1-வாக்குப்பதிவு சதவீதம்:
78.8%
மாவட்டம்
:
திருநெல்வேலி
மொத்த வாக்காளர்கள்
:
211903
ஆண் வாக்காளர்கள்
:
106025
பெண் வாக்காளர்கள்
:
105878
திருநங்கை வாக்காளர்கள்
:
0
தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்
சரத்குமார்

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது:
சரத்குமார் - சமத்துவ மக்கள் கட்சி - 92253 - 
மற்றவர்கள் நிலவரம்:
கருப்பசாமி பாண்டியன் வீ. - தி.மு.க. - 69286
அன்புராஜ் எஸ்.வி. - பா.ஜனதா - 2698
நன்றி : மலை மலர்