Sunday, May 29, 2011

வீ.கே.புதூரில் மக்கள் நலப்பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூரில் மக்கள் நலப்பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். வீரகேரளம்புதூர் பஞ்., மக்கள் நலப்பணியாளராக பணிபுரிபவர் ஸ்டெல்லாமேரி. இவரிடம் இதே ஊரில் லோடுமேன் வேலை பார்க்கும் சக்திவேல்முருகன் (38) செல்போனில் ஆபாசமாக பேசினாராம். இதுகுறித்து ஸ்டெல்லாமேரி போலீசில் தெரிவித்தார். போலீசார் சக்திவேல்முருகனை அழைத்து இதுபோல் இனி நடக்க கூடாது என கூறி அனுப்பினார்களாம். இந்நிலையில் ஸ்டெல்லாமேரியை வழியில் கண்ட சக்திவேல்முருகன், "போலீசிடமா போகிறாய், உன்னை வெட்டிக் கொன்றுவிடுவேன்' என மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மேரி மீண்டும் போலீசில் புகார் செய்தார். வீரகேரளம்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் சீனியம்மாள் வழக்குபதிவு செய்து சக்திவேல்முருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment