Thursday, June 2, 2011

வருவாய் தீர்வாய முகாம் வீ.கே.புதூரில் 8ல் துவக்கம்

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாய முகாம் 8ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது. வீரகேரளம்புதூர் தாலுகாவில் குறுவட்ட அளவிலான 1420ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய முகாம் நடைபெறுகிறது. இதில் வருவாய்த்துறை தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும். தினமும் காலை 9 மணிக்கு துவங்கும் இம்முகாமில் வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கலந்து கொள்கிறார். வரும் 8ம் தேதி சுரண்டை குறுவட்டத்தில் அடங்கிய சுரண்டை பகுதி1 மற்றும் 2, சிவகுருநாதபுரம், ஆனைகுளம், குலையநேரி, ஜமீன், சுரண்டை பகுதிகளுக்கும், 9ம் தேதி வீரகேரளம்புதூர் குறுவட்டத்தில் அடங்கிய வெள்ளகால், வீரகேரளம்புதூர், ராஜகோபாலப்பேரி, அகரம், வீராணம் பகுதிகளுக்கும் நடக்கிறது. 10ம் தேதி கருவந்தா குறுவட்டத்தில் அடங்கிய மேலக்கலங்கல், கீழக்கலங்கல், நவநீதகிருஷ்ணாபுரம், குறிச்சாம்பட்டி, கருவந்தா, வாடி, அச்சங்குட்டம் பகுதிகளுக்கும், 14ம் தேதி ஊத்துமலை குறுவட்டத்தில் அடங்கிய வடக்கு காவலாகுறிச்சி, ஊத்துமலை, மேலமருதப்பபுரம், பலபத்திரராமபுரம், மருக்காலன்குளம், முத்தம்மாள்புரம் கிராமங்களுக்கும் நடக்கிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தாசில்தார் மணிபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.
நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment