Tuesday, September 11, 2012

வீ.கே புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி : நல்லாசிரியருக்கு பாராட்டு விழா

வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர் இசக்கிக்கு பாராட்டு விழா கூட்டம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியை அருமை ஸ்மைலின் தலைமை வகித்தார். வீ.கே புதூர் பஞ்., துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள் சங்கர், கணேசன், பாலசுப்பிரமணியன், சண்முகையா, ஜேசுதாசன், தங்கத்துரை, சிவராமன், சக்தி முருகன், திரவியம் உட்பட பலர் பாராட்டி பேசினர்.நல்லாசிரியர் இசக்கி ஏற்புரை வழங்கினார். பள்ளி ஆசிரியை மேரி ரோஸ்லெட் நன்றி கூறினார்.
நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment