Wednesday, September 26, 2012

வீ.கே.புதூர் அருகே மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளிய டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்தார்.வீரகேரளம்புதூர் தாலுகா பகுதியில் அனுமதியின்றி சிற்றாற்றில் இரவு நேரங்களில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தவகலை தொடர்ந்து தென்காசி ஆர்.டி.ஓ. ராஜகிருபாகரன் ஆலோசனையின் பேரில் தாசில்தார் குருச்சந்திரன் தலைமையில் பறக்கும்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் துணை தாசில்தார் லெவன்சியா சில்வேரா, வருவாய் ஆய்வாளர் சங்கரன், கிராம நிர்வாக அலுவலர் முருகையா ஆகியோர் தாயார்தோப்பு அருகே ரோந்து சென்றனர். அப்போது சிற்றாற்றில் இருந்து மணல் அள்ளிக் கொண்டு வந்த டிராக்டரை மடக்கினர். டிராக்டர் டிரைவர் தப்பியோடிவிட்டார். வீரகேரளம்புதூர் போலீசார் உதவியுடன் டிராக்டர் பறிமுதல் செய்து தாலுகா வளாகத்தில் நிறுத்தப்பட்டது.மேலும் அகரம் அணைக்கட்டு பகுதியிலிருந்து அள்ளி வயல் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலும் கைப்பற்றப்பட்டது. மணல் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவினர் தினமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தாசில்தார் குருச்சந்திரன் தெரிவித்தார்.
நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment