Sunday, December 16, 2012

வீ.கே.புதூரில் பயனாளிகளுக்கு எம்எல்ஏ., நலத்திட்ட உதவி வழங்கல்

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த விழாவில் எம்எல்ஏ சரத்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சமூக நலத்துறையின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குழந்தைசாமி வரவேற்றார். தாசில்தார் குருசந்திரன், வீரகேரளம்புதூர் பஞ்., தலைவர் பாபுராஜா (எ) மருதப்பபாண்டியன், மாவட்ட ச.ம.க., செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி எம்எல்ஏ., சரத்குமார் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பஞ்., தலைவர்கள் கீழக்கலங்கல் இந்திராணி, மேலக்கலங்கல் சரவணவேல்முருகையா, வீராணம் பொன்பாண்டியன், கருவந்தா நளினி, ச.ம.க., மாவட்ட துணை செயலாளர்கள் துரை, கண்ணன், மாவட்ட அதிமுக., எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் சண்முகவேலு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment