Sunday, December 30, 2012

விபத்தில் பலியான பெண் உடல் தோண்டி எடுத்து பரிசோதனை * வீ.கேபுதூர் அருகே பரபரப்பு

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் அருகே பைக் விபத்தில் இறந்து போலீசாருக்குத் தெரியாமல் புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

வீரகேரளம்புதூரை அடுத்த செம்புலிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மனைவி பாப்பு (60). இவர் மீது துத்திகுளத்தைச் சேர்ந்த தங்கராஜ் (37) என்பவரது பைக், மோதியதில் கீழே விழுந்து தலையில் பயங்கர காயம் ஏற்பட்டது.

பாளை ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாப்பு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி இறந்தார். அவருடைய உடலை செம்புலிப்பட்டணத்திற்குக் கொண்டு வந்த உறவினர்கள் போலீசுக்குத் தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்துவிட்டனர்.
தற்போது இது குறித்து தகவல் அறிந்த வீரகேரளம்புதூர் தாசில்தார் குருச்சந்திரன், சுரண்டை இன்ஸ்பெக்டர் சார்லஸ் கலைமணி முன்னிலையில் பாப்புவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அந்த இடத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டது.

இச்சம்பவம் வீரகேரளம்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment