Sunday, June 2, 2013

வீரகேரளம்புதூரில் பைக் திருடிய2 பேர் கைது

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் பைக் திருடிய திருடர்களை போலீசார் கைது செய்தனர்.வீரகேரளம்புதூர் கோட்டை அண்ணா நகர் அருகில் சுரண்டை இன்ஸ்பெக்டர் ஜமால், எஸ்.ஐ., சுந்தர் மூர்த்தி, போலீசார் சசிகுமார் மற்றும் அந்தோணி பாஸ்கர் வாகன பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே நம்பர் பிளேட் இல்லாத வண்டியை ஓட்டிவந்த வடகரையைச் சேர்ந்த மனோகரன் (எ) முகம்மது ரியாஸ்தீன் (38), சங்கரன்கோவிலை அடுத்த பெருங்கோட்டூரைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் வேலுச்சாமி (49) ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் ராஜபாண்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது எக்ஸெல் வண்டியைத் திருடி, நம்பர் பிளேட்டைக் கழட்டி ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து ஹோண்டா சைன் பைக்கும் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment