Monday, March 28, 2011

தென்காசி தொகுதியில் வறட்சி பகுதிகளை வளமாக்க கருப்பாநதி பாசன கால்வாய் அமைக்கப்படும்

வீரகேரளம்புதூர் : "தென்காசி தொகுதியில் ஆலங்குளம் யூனியன் வடக்கு பகுதியில் வறட்சி பகுதியை வளமாக்க கருப்பநதி பாசன கால்வாய் அமைக்கப்படும்' என வீரகேரளம்புதூர் தாலுகா பகுதியில் நடந்த பிரசாரத்தில் திமுக வேட்பாளர் கருப்பசாமி பாண்டியன் உறுதியளித்தார். திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் தென்காசி தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கருப்பசாமிபாண்டியன் வீரகேரளம்புதூர் தாலுகா பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ""ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போதும் எண்ணிலடங்கா திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக அரசு அரியணை ஏறியதும் அவை அனைத்தும் செயல்படுத்தப்படும். வீரகேரளம்புதூர் தாலுகாவில் மருக்காலன்குளம் தொடங்கி ஊத்துமலை, கீழக்கலங்கல், உச்சிபொத்தை உள்ளிட்ட பகுதிகள் வறட்சி பகுதிகளாக உள்ளன. இப்பகுதியை வளமாக்க நிலத்தடி நீராதாரத்தை பெருக்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கருப்பாநதியிலிருந்து பாசன கால்வாய் கலைஞர் கால்வாய் என்ற பெயரில் அமைத்துத் தரப்படும். அதேபோல் ராமநதியிலிருந்து காமராஜ் கால்வாய் என்ற பெயிரிலும் கால்வாய் அமைக்கப்படவுள்ளது. இதுபோல் நல்ல பல திட்டங்கள் தொடர திமுக கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்'' என்றார். பிரசாரத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பழனிநாடார், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காமராஜ், காங்.,மாநில செயலாளர் சார்லஸ், திமுக மாவட்ட பிரதிநிதிகள் ராஜேஸ்வரன், முரளிராஜா, வாடியூர் மரியராஜ், தர்மர் (எ) அந்தோணிசாமி, முன்னாள் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மேலக்கலங்கல் பஞ்.,தலைவர் அன்பழகன், அச்சங்குன்றம் பஞ்.,தலைவர் முருகேசன், ஜோசப், பூமாலைராஜா, செயலாளர்கள் பிலிப்ராஜா, ராஜேந்திரன், வீராணம் இருதாலய மருதப்பபாண்டியன், ஷேக்மைதீன், தங்கையா, செல்வம், முன்னாள் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜேசுராஜன், வீ.கே.புதூர் செயலாளர் மாரியப்பன், முன்னாள் பஞ்.,தலைவர் பரசுராமன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வீரகேரளம்புதூர், வீராணம், அதிசயபுரம், நாச்சியார்புரம், சோலைசேரி, கருவந்தா, அச்சங்குன்றம், லெட்சுமிபுரம், பரங்குன்றாபுரம், மரியதாய்புரம், வாடியூர், குருந்தன்மொழி பகுதிகளில் கருப்பசாமிபாண்டியன் பிரசாரம் செய்தார்.

No comments:

Post a Comment