Monday, March 28, 2011

வீ.கே.புதூர் பகுதியில் சரத்குமார் ஓட்டு சேகரிப்பு

வீரகேரளம்புதூர் : தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமார் வீரகேரளம்புதூர் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
வீரகேரளம்புதூர் பகுதியில் அகரம், நாச்சியார்புரம், காவலாக்குறிச்சி, சோலைசேரி, கருவந்தா, அச்சங்குன்றம், லெட்சுமிபுரம், பரங்குன்றாபுரம், வாடியூர், வீரகேரளம்புதூர், வீராணம், அதிசயபுரம், ராஜகோபாலபேரி, தாயார்தோப்பு ஆகிய ஊர்களில் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுகளை கேட்டு சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான சரத்குமார் ஓட்டு சேகரித்தார்.
ஒவ்வொரு ஊரிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து சரத்குமாரை வரவேற்றனர். ஊழல் மலிந்த ஆட்சியை அகற்றவும், வாரிசு அரசியலை அழிக்கவும், தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளிக்க அவர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார். பெண்கள் கூடியிருந்த இடங்களில் பிரசார வேனிலிருந்து இறங்கிச் சென்று வணங்கி ஓட்டு சேகரித்தார்.
பிரசாரத்தின் போது சுரண்டை எஸ்.வி.கணேசன், சமக மாவட்ட துணை செயலாளர் கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் ஆர்.வி.ராமர், ஆலங்குளம் ஒன்றிய துணை சேர்மன் வீரபாண்டியன், குருந்தன்மொழி என்.எச்.எம்.பாண்டியன், வீராணம் பஞ்., முன்னாள் துணை தலைவர் வீரபாண்டியன், கிளை செயலாளர் ஜிந்தா, இந்திய கம்யூ., தாலுகா செயலாளர் ஜின்னா, வீரகேரளம்புதூர் செந்தில், செயலாளர் சுப்பையாபாண்டியன் உட்பட அனைத்து கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக வீரகேரளம்புதூர் எல்கையில் அதிமுக தொண்டர் தாயார்தோப்பு தினேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பில் ஆலங்குளம் ஒன்றிய மகளிரணி செயலாளர், கருவந்தா கிளை செயலாளர் வைரக்கனி உட்பட நூற்றுக்கணக்கான கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment