Friday, April 8, 2011

வீ.கே.புதூரில் கோர்ட் : கருப்பசாமிபாண்டியன் உறுதி

வீரகேரள்புதூர் : "திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் வீரகேரளம்புதூரில் கோர்ட் அமைக்கப்படும்' என கருப்பசாமிபாண்டியன் உறுதியளித்தார். தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் கருப்பசாமி பாண்டியன் வீரகேரளம்புதூரில் ஓட்டு சேகரித்து பேசியதாவது: ""ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் தாராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வீரகேரளம்புதூரில் சிற்றாற்றின் குறுக்கே 4 கோடி ரூபாயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 1.21 கோடி செலவில் தாலுகா கட்டடம் கட்டப்பட்டுள்ளது. புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. திமுக அரசு மீண்டும் அரியனை ஏறியதும் இது 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்படும். வீ.கே.புதூரில் நீதிமன்றம் அமைக்கப்படும். தாலுகா அலுவலக வளாகத்தில் சார்நிலை கருவூலக கட்டடம் கட்டப்படும். புதிய சார்பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படும். பஸ் ஸ்டாண்ட், நிழற்குடை ஏற்படுத்தப்படும். முக்கிய தேவையான முழுமையான தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பிடங்கள் கட்டித் தரப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக வீடுகள் தோறும் நல்ல தண்ணீருக்கான இணைப்புகள் வழங்கப்படும். சுரண்டையை மையமாக கொண்டு புதிய தாலுகா அமைக்கப்படும் என தெரிவித்த கருத்து வீ.கே.புதூர் தாலுகா மாற்றப்படும் என தவறாக திரித்து விடப்பட்டுள்ளது. வீ.கே.புதூர் தாலுகாவில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்'' என்றார். தொடர்ந்து ராஜபாண்டி, தாயார்தோப்பு, கீழராஜகோபலப்பேரி, மேலராஜகோபாலப்பேரி, கோட்டை அண்ணாநகர், அதிசயபுரம், ராமனூர், கலிங்கப்பட்டி பகுதியில் ஓட்டு சேகரித்தார். வேட்பாளருடன் கீழப்பாவூர் ஒன்றிய சேர்மன் எஸ்.கே.டி.பி.காமராஜ், ஒன்றிய திமுக செயலாளர் சிவபத்மநாபன், மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா, திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முரளிராஜா, கிளை செயலாளர்கள் மாரியப்பன், சைமன், இருதாலய மருதப்பபாண்டியன், பாலசுப்பிரணியன், சேசுராஜன், பரசுராமன், லக்குமணன், பரமசிவன் உட்பட கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் பஞ்.,தலைவர் பரசுராமன், முன்னாள் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சேசுராஜன் ஆகியோர் வேட்பாளர் கருப்பசாமி பாண்டியனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

No comments:

Post a Comment