Saturday, September 17, 2011

வீ.கே.புதூர் உச்சிமாகாளி அம்மன் கோயிலில் கொடை விழா

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா நடந்தது. வீரகேரளம்புதூர் சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உச்சிமாகாளி அம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. தொடர்ந்து கடந்த 9ம் தேதி மாலை 6 மணிக்கு 508 திருவிளக்கு பூஜை நடந்தது. 12ம் தேதி மாலை 5 மணிக்கு குற்றால தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வரும் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இரவு 8 மணிக்கு 2010-11ம் ஆண்டு 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற வீரகேரளம்புதூர் சேனைத்தலைவர் சமுதாய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வருஷாபிஷேகமும், உச்சிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும், சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு சமுதாய மண்டபத்தில் இருந்து பால்குடம் மற்றும் கன்னியாகுமரி தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வருதலும், பால்குடம் மற்றும் தீர்த்தங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பொங்கலிடுதலும், இரவு 9 மணிக்கு செண்டா மேளம் முழங்க தீச்சட்டி ஏந்தி வலம் வந்து பக்தர்கள் நேர்த்தி செலுத்தினர். இரவு 12 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நற்று காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி வந்து கரைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. வரும் 20ம் தேதி எட்டாம் திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சமுதாய நாட்டாண்மை நயினார் தலைமையில் வீரகேரளம்புதூர் சேனைத்தலைவர் சமுதாயத்தினர் செய்தனர்.
நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment