Thursday, September 8, 2011

வீ.கே.புதூர் உச்சிமகாளி அம்மன் கோயிலில் 13ம் தேதி கொடை விழா

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் உச்சிமாகாளி அம்மன் கோவில் திருவிழா கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. வீரகேரளம்புதூரில் உச்சிமாகாளி அம்மன் கோயில் ஆவணி கொடைவிழா கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நாளை (9ம் தேதி) மாலை 5 மணிக்கு 508 திருவிளக்கு பூஜை நடக்கிறது. 12ம் தேதி மாலை குற்றால தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வரும் நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி தீப ஆராதனையும் நடக்கிறது. அன்று இரவு 10மணிக்கு 2010-11ம் ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் வீ.கே.புதூர் சேனைத்தலைவர் சமுதாய மாணவ மாணவிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. 13ம் தேதி காலை 6.30 மணிக்கு வருஷாபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன. காலை 9 மணிக்கு சமுதாய மண்டபத்தில் இருந்து பால்குடம் மற்றும் கன்னியாகுமரி தீர்த்தம் எடுத்து ஊர்பவனி வரும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால்குடம், தீர்த்தங்கள், அபிஷேகங்களும், அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு பொங்கலிம் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு தீச்சட்டி எடுத்து ஊர்பவனி வருதலும், 12 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் வலம் வருதலும், கிடாய் வெட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 14ம் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டும், முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை நாட்டாமை நயினார் தலைமையில் வீரகேரளம்புதூர் சேனைத்தலைவர் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.
நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment