Wednesday, September 28, 2011

வீ.கே.புதூரில் விழிப்புணர்வு பேரணி

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூரில் மூளையசதி நோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடந்தது. வீரகேரளம்புதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் கல்லூரி சார்பில் மூளையசதி நோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடந்தது. கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை வீரகேரளம்புதூர் தாசில்தார் சுமங்கலி கொடியசைத்து துவங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஏஞ்சல்ராணி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகராஜன் முன்னிலை வகித்தனர். பேரணி தாலுகா அலுவலகம் முன் துவங்கி போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. மூளையசதி நோய் குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் நிறைந்த அட்டைகளை ஏந்தி வந்த மாணவியர் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகித்தனர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு முதல்வர் ஏஞ்சல்ராணி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அன்னலெட்சுமி வரவேற்றார். மூளையசதி நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மாணவிகளின் குறுநாடகம் மற்றும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் சமாதானப்பிரியா நன்றி கூறினார்.
நன்றி: தினமலர் 

No comments:

Post a Comment