Wednesday, September 28, 2011

வீ.கே.புதூர் அருகே பெண்ணின் எலும்புக்கூடு

வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் அருகில் மலைப்பகுதியில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வீ.கே.புதூர் - ஆலங்குளம் வழியில் உள்ள இடைச்சி மலையின் வடக்கு பகுதியில் முட்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் ஒரு எலும்புக்கூடு கிடப்பதை கண்ட வனக்காவலர் காசி கழுநீர்குளம் கிராம நிர்வாக அலுவலர் முத்துசெல்வனிடம் தகவல் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வீ.கே.புதூர் இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ் தலைமையில் சென்று பார்த்தபோது சுமார் 45 வயது மதிக்கதக்க ஒரு பெண்ணின் எலும்புகூடு என தெரிய வந்தது.உடம்பு முழுவதும் மக்கிப் போன நிலையில் எலும்புக்கூடு மட்டும் கிடந்தது. கூட்டின் மேல் ஆரஞ்ச் கலர் சேலையும், சந்தன கலர் ஜாக்கெட்டும், பிரவுன் கலர் பாவாடையும் இருந்தன. கழுத்தில் தாயத்துடன் கூடிய கருப்பு கயிறும் மட்கிய நிலையில் கிடந்தது. கையில் அலுமினிய வளையல்கள் இருந்தன. இறந்து நான்கு மாதங்களுக்கு மேல் இருக்கலாம் என தெரிகிறது.தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகராஜன் வழக்குபதிவு செய்தார். எலும்புக்கூடு கைப்பற்றப்பட்டு பாளை., ஐகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது கொலையா அல்லது தற்கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நன்றி: தினமலர் 

No comments:

Post a Comment