Friday, January 6, 2012

வீ.கே.புதூரில் குடிநீர் குழாயில் உடைப்பு


வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் மெயின்ரோட்டில் ஏற்படடுள்ள தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புளியங்குடி, கடையநல்லூர் மற்றும் வழியோர கிராமங்களுக்கான தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் வீ.கே.புதூர் மெயின்ரோட்டின் வழியே செல்கிறது. இதில் வீ.கே.புதூர் வடக்கு பஸ்ஸ்டாப் அருகில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. வடிகால் வாரியத்தின் மூலம் பலமுறை அடைக்கப்பட்டும் மீண்டும், மீண்டும் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.

தற்போதும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி சாக்கடை நீருடன் கலக்கிறது. குடிநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் அந்த இடம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. உடைப்பு ஏற்பட்ட தகவல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து எட்டு நாட்களுக்கு மேலாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கொஞ்சம் கசிவுதானே உள்ளது. அதிகம் உடைந்தால் உடனடியாக தோண்டி அடைத்து விடலாம் என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

எனவே உடைப்பு மேலும் அதிகமாகி புதிய ரோடு முழுவதும் சேதமாகும் முன் இதனை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment