Friday, January 6, 2012

வீ.கே.புதூரில் கடையடைப்பு


வீரகேரளம்புதூர் : கேரள அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து வீ.கே.புதூரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

வீரகேரளம்புதூர் வியாபாரிகள் சங்கம், வட்டார ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கேரளாவில் முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினை அமல்படுத்தாமல் புதிய அணை கட்ட தீவிரம் காட்டும் கேரள அரசை கண்டித்தும் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

நகரின் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால் ரோடு முழுவதும் வெறிச்சோடி கிடந்தது. ஆட்டோக்கள், வேன்கள் ஓடவில்லை. வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள், ஓட்டுநர்கள் கேரள அரசுக்கு எதிராகவும், தமிழர் நலனை காக்க வற்புறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment