Thursday, May 10, 2012

வீ.கே.புதூர் தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்


வீரகேளம்புதூர் : வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி துவங்கியது.

வீ.கே.புதூர் தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களுக்கான 1421ம் பசலி ஆண்டு ஜமாபந்தி (வருவாய் குறை தீர்வாயம்) துவங்கியது. நிகழ்ச்சியை தென்காசி ஆர்டிஓ ராஜகிருபாகரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கிராம மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆர்டிஓ வின் நேர்முக உதவியாளர் பரமசிவன், தாசில்தார் சுமங்கலி, தென்காசி கோட்ட புள்ளியியல் அலுவலர் ஆலிசெய்யது சிராஸ்தீன் பாவா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குழந்தைசாமி, தலைமையிடத்து துணை தாசில்தார் செல்வநாயகம், வட்ட வழங்கல் அலுவலர் முத்துப்பாண்டி, மண்டல துணை தாசில்தார் லெவன்சியா சில்வேரா, சுரண்டை வருவாய் ஆய்வாளர் அரவிந்த் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி: தினமலர் 

1 comment:

  1. Live Casino Hotel in Thauberbet | Thauberbet 코인카지노 코인카지노 matchpoint matchpoint 215red7 slots for iOS & Android - Konicasino.com

    ReplyDelete