Thursday, December 16, 2010

வளர்ச்சி திட்டப் பணிகளை சேர்மன் ஆய்வு

வீரகேரளம்புதூர் : கீழப்பாவூர் பஞ்., யூனியனுக்கு உட்பட்ட வீரகேரளம்புதூர் பகுதியில் ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப் பணிகளை யூனியன் சேர்மன் காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கீழப்பாவூர் பஞ்.,யூனியனுக்கு உட்பட்ட வீரகேரளம்புதூர், ராஜகோபாலப்பேரி, துத்திகுளம், இடையர்தவணை ஆகிய பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களின் அடிப்படையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.வீரகேரளம்புதூர் பஞ்., அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் புதிய ஊரணி அமைத்தல், அனைத்து சமுதாய மக்களுக்கான பொது மயானத்தில் எரியூட்டும் பிறை, ரூ.3 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நன்மைக்கூடம், ஒன்றிய பொது நிதியிலிருந்து இஸ்லாம் சமுதாய மயானத்திற்கு ரூ.2.50 லட்சம் செலவில் பாதை அமைத்தல்.

வீரகேரளம்புதூர் - ராஜகோபாலப்பேரி சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றுவதற்காக ரூ.3.60 லட்சம் செலவில் வாறுகால் அமைத்தல், கலிங்கப்பட்டியில் ரூ.4 லட்சத்தில் புதிய நூலக கட்டடம் கட்டுதல், ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ரூ.1.30 லட்சசத்தில் சமையலறை கட்டடம் மற்றும் பள்ளி சீரமைப்பு பணிகள், ரூ.3.50 லட்சத்தில் நன்மைக்கூடம், ரூ.2 லட்சத்தில் எரியூட்டும் பிறை மற்றும் சிமென்ட் சாலை அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.ராஜகோபாலப்பேரி பஞ்., அதிசயபுரத்தில் ரூ.3.50 லட்சத்தில் தார்சாலை அமைத்தல், நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் தாயார்தோப்பு - கீழச்சுரண்டை இடையே 50 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் தார்சாலை அமைத்தல் மற்றும் ராஜபாண்டி பஞ்.,சில் உள்ள செம்புலிப்பட்டணம் - கீழமேடு இடையே 34 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் தார்சாலை அமைத்தல் ஆகிய பணிகள் நடந்ததுள்ளன.ஒன்றிய பொது நிதியின் கீழ் இடையர்தவணை பஞ்., பள்ளிக்கூட தெருவில் ரூ.5 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைத்தல், ஒன்றிய உள்கட்டமைப்பு நிதியின் கீழ் ஒரு லட்ச ரூபாயில் சிமென்ட் தளம் அமைத்தல் ஆகிய பணிகளும், துத்திகுளம் பஞ்.,சில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானிய திட்டத்தின் கீழ் ரூ.6.90 லட்சத்தில் புதிய பஞ்., அலுவலகமும், ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் வாறுகால் அமைக்கும் பணியும் நடந்து முடிந்துள்ளன.சுமார் ஒரு கோடியே 27 லட்ச ரூபாயில் செயல்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை யூனியன் சேர்மன் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன் ரூ.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க விருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.ஆய்வின் போது யூனியன் என்ஜினியர் பூச்செண்டு, பஞ்., தலைவர்கள் முருகையா பாண்டியன், ராமசாமி, யூனியன் கவுன்சிலர்கள் பொன்மோகன்ராஜ், மாரியம்மாள், உதயகுமார், குத்தாலிங்கம் மற்றும் மரியலூயிஸ், சாலை ஆய்வாளர்கள் ஜெயராஜ், குருசாமி உடனிருந்தனர்.

No comments:

Post a Comment