Thursday, December 16, 2010

வீ.கே.புதூர் வட்டத்தில் ஜமாபந்தி இன்று தொடக்கம்

வீரகேரளம்புதூர் வட்டத்தில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கி ஜூன் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
​ ​ ​ இதுகுறித்து வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் மணிபாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
​ ​ ​ திருநெல்வேலி மாவட்ட வழங்கல் அலுவலர் வீரமணி தலைமையில் நடைபெறும் இந் நிகழ்ச்சியில்,​​ ஜூன் 9-ம் தேதி ​(புதன்கிழமை)​ சுரண்டை குறு வட்டத்திற்கு உள்பட்ட சுரண்டை,​​ சிவகுருநாதபுரம்,​​ ஜமீன் சுரண்டை,​​ அயன் சுரண்டை,​​ ஆனைகுளம் ஆகிய வருவாய் கிராமங்களின் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது.
​ ​ ​ தொடர்ந்து ஜமாபந்தி நடைபெறும் தேதிகளும், இடங்களும்
ஜூன் 10-வீரகேரளம்புதூர் குறு வட்டத்திற்கு உள்பட்ட வீரகேரளம்புதூர்,​​ வெள்ளகால்,​​ ராஜகோபாலப்பேரி,​​ வீராணம்.
​ ​ ​ ஜூன் 11-கருவந்தா குறு வட்டத்திற்கு உள்பட்ட அச்சங்குன்றம்,​​ வாடியூர்,​​ குறிச்சான்பட்டி,​​ நவநீதகிருஷ்ணாபுரம்,​​ மேலக்கலங்கல்,​​ கீழக்கலங்கல்,​​ கருவந்தா.
​ ​ ​ ஜூன் 15} ஊத்துமலை குறுவட்டத்திற்கு உள்பட்ட வடக்கு காவலாகுறிச்சி,​​ மருதப்பபுரம்,​​ மருக்கலாங்குளம்,​​ ஊத்துமலை.

No comments:

Post a Comment