Thursday, December 16, 2010

வீ.கே.புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தல்

வீரகேரளம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
​ ​ ​ வட்ட தலைநகரான வீரகேரளம்புதூரில் 40 ஆண்டுகளாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.​ சங்கரன்கோவில் துணை சுகாதார மாவட்டத்தின்கீழ் உள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையம்,​​ தற்போது 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
​​ ​ ஆண்டுதோறும் இங்கு பிரசவம் அதிக அளவில் நடைபெறுகிறது.​ ஆனால் ஒரே நேரத்தில் 2-க்கும் கூடுதலாக பிரசவம் நடைபெற்றால் தாய்-சேயைத் தங்க வைப்பதற்கு போதுமான படுக்கை வசதிகள் இல்லை.
​ ​ ​ எனவே,​​ வீரகேரளம்புதூர் அரசு ஆரம்ப சுதாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என வீரகேரளம்புதூர் ஊராட்சித் தலைவர் எஸ்.எம்.​ மருதப்பபாண்டியன் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment