Thursday, December 16, 2010

வீரகேரளம்புதூர் மக்கள்தொகை கணக்கெடுப்பு கட்டுப்பாட்டு அறை திறப்பு

வீரகேரளம்புதூர் வட்டத்தில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பொதுமக்களின் புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு பணி ஜூன் 1-ம் தேதி தொடங்கியது. இப் பணி குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை நிவர்த்தி செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை பொதுமக்கள் நேரிலோ அல்லது கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04633 - 277140, 94450-00677 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்களின் அனைத்து கேள்வி களுக்கும் சரியான தகவலை தந்து ஒத்துழைக்குமாறு பொதுமக்களை வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் மணிபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment