Friday, January 14, 2011

ராஜகோபாலப்பேரி பஞ்.,மக்கள்நலப்பணியாளர் தற்கொலை வழக்கு: பஞ்.,தலைவர் கைது

வீரகேரளம்புதூர்:ராஜகோபாலப்பேரி பஞ்., மக்கள் நலப்பணியாளர் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பஞ்., தலைவர் கைதானார்.வீரகேரளம்புதூர் அருகிலுள்ள ராஜகோபாலப்பேரி பஞ்.,சில் மக்கள் நலப்பணியாளராக பணியாற்றியவர் அருமைராஜ். இவர் கடந்த 12.11.2010 அன்று தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையின் போது சிக்கிய கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் ராஜகோபாலப்பேரி பஞ்., தலைவர் ஜான் மற்றும் உதவியாளர் துரை என குறிப்பிட்டிருந்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த 21.12.2010 அன்று பஞ்., உதவியாளர் துரையை போலீசார் கைது செய்தனர். பஞ்., தலைவர் ஜானை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீராணம் அருகிலுள்ள கருவந்தா விலக்கில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த ஜானை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.இன்ஸ்பெக்டர் ஜமால் ஜானை செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர் செய்தார். பின்னர் அவர் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment