Friday, January 14, 2011

வீ.கே.புதூர் தாலுகா பகுதியை தனி ஒன்றியமாக அறிவிக்க கோரிக்கை

சுரண்டை : ஆலங்குளம் ஒன்றிய வட பகுதியாகிய வீரகேரளம்புதூர் தாலுகா பகுதியை தனி ஒன்றியமாக அறிவிக்க திமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் ஒன்றிய வட பகுதியில் வீரகேரளம்புதூர் தாலுகாவில் உள்ள 5 பஞ்., பகுதிகளையும், கடையநல்லூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள 2 பஞ்.,களையும், சங்கரன் கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சேர்ந்தமரம் பிர்கா பகுதியிலுள்ள பஞ்.,களையும் இணைத்து இப்பகுதி மக்களின் நலன்கருதி இக்கிராமங்களுக்கு மைய பகுதியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய ஒன்றியம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மேலும் வறட்சியின் பிடியில் வாழ்நாள் முழுவதும் சிக்கி வறண்டு தத்தளிக்கும் இப்பகுதிக்கு நீர் ஆதாரம் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த பகுதியிலுள்ள அனைத்து கிராம மக்கள் தென்காசி, சுரண்டை, வீரகேரளம்புதூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்றுவர போதிய பஸ் வசதி செய்து தரவேண்டும் என மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment