Friday, January 14, 2011

வீ.கே.புதூர் நூலகவாசகர் வட்ட கூட்டம்

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் நூலக வாசகர் வட்ட கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு வாசகர் வட்ட தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். நூலக பணியாளர் வேலம்மாள் வரவேற்றார். நூலகத்திற்கு கூடுதல் புத்தகங்களை வழங்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் புதிய வாசகர்களை ஏற்படுத்தவும், நூலகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புதிய புரவலர்களை சேர்க்க முயற்சி மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் செண்பகம் புதிய புரவலராக சேர்ந்தார். வாசகர்கள் வக்கீல் சுப்பையா, வெள்ளப்பாண்டி, ஜெபா, முருகன், பணியாளர்கள் சாந்தி, புனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.நூலகர் ஆறுமுகசாமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment