Friday, January 14, 2011

ராஜகோபாலப்பேரி பஞ்.,மக்கள்நலப்பணியாளர் தற்கொலை வழக்கு பஞ்.,உதவியாளர் கைது

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் அருகேயுள்ள ராஜகோபாலப்பேரி பஞ்.,மக்கள் நலப்பணியாளர் தற்கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பஞ்., உதவியாளர் கைது செய்யப்பட்டார்.ராஜகோபாலப்பேரி பஞ்.,சில் மக்கள் நலப்பணியாளராக பணிபுரிந்தவர் அருமைராஜ் (30). இவர் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் இவரது உடலை எரித்துவிட்டனர். தவகல் அறிந்த போலீசார் உறவினர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.விசாரணையின் போது இவர்தன் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் ராஜகோபாலப்பேரி பஞ்., தலைவர் ஜான் மற்றும் உதவியாளர் நவநீதகிருஷ்ணன் (எ) துரை ஆகியோர் கிராம பஞ்.,சின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் முறைகேடு செய்ய தன்னை வற்புறுத்தி பணிய வைத்ததாகவும், பின்னர் இந்த முறைகேடுகளுக்கு தான் மட்டுமே காரணம் என மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பஞ்., தலைவர் மற்றும் உதவியாளர் மீது சுரண்டை இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடிவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து சென்றபோது கலிங்கப்பட்டி விலக்கு அருகே நின்று கொண்டிருந்த பஞ்., உதவியாளர் நவநீதிகிருஷ்ணன் (எ) துரையை கைது செய்து செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

No comments:

Post a Comment