Friday, January 14, 2011

வீ.கே.புதூர் பஞ்.,தலைவருக்கு விருது

வீரகேரளம்புதூர் : உள்ளாட்சியில் நல்லாட்சி புரிந்தமைக்காக வீரகேரளம்புதூர் பஞ்., தலைவருக்கு நட்சத்திர சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தேசிய ஒருமைப்பாட்டு நல்வாழ்வு சங்கம் என்ற அமைப்பு மாநில அளவில் கிராம ஊராட்சிகளில் குடிதண்ணீர் வசதி, பொது சுகாதாரம், கழிவுநீர் வெளியேற்ற வாறுகால் வசதிகள், கழிப்பிட வசதி, சுற்றுச்சூழலை காக்கும் ஏற்பாடுகள் முதலான அடிப்படை வசதிகளை திறம்பட செயல்படுத்தும் பஞ்.,களை தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டிற்கான இச்சங்கத்தின் விருதுகள் சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன.இவ்விழாவில் உள்ளாட்சியில் நல்லாட்சி புரிந்த வீரகேரளம்புதூர் பஞ்., தலைவர் மருதப்பபாண்டியன் (எ) பாபுராஜாவிற்கு நட்சத்திர சாதனையாளர் விருதிற்கான கேடயமும், தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஐகோர்ட் நீதிபதி வள்ளிநாயகம் இவற்றை வழங்கி கவுரவித்தார்.விழாவிற்கு தேசிய ஒருமைப்பாட்டு நல்வாழ்வு சங்கத்தின் இயக்குநரும், தலைவருமான பெரியாண்டவர் தலைமை வகித்தார். மனித உரிமைகள் கழகத்தின் மாநில தலைவர் சீமான் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சேரன்மகாதேவி பஞ்.,தலைவர் பாபநாசம், திமுக முன்னாள் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சேசுராஜன், வீரகேரளம்புதூர் பஞ்., துணைத் தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர். சங்க ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.விருத பெற்ற பஞ்.,தலைவர் பாபுராஜா கடந்த ஆண்டு இந்திய கலாச்சார கவுன்சிலின் சார்பில் சிறந்த பஞ்.,தலைவருக்கான கிராமிய ரத்னா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment